உள்மனமோ உனை நாட
ஏமாற்றத்தை அறிவுணர
கண்களும் எனை மீறி
கண்ணீர் சிந்த நானழுதேன்!
உனையே என் உறவென்றும்
உன்னாலே என் மகிழ்வென்றும்
வலம் வந்த தருணமெல்லாம்
வேதனையாய் வலிக்கிறது!
தனிமை எனக்குப் புதிதல்ல
வேதனையும் புதிதல்ல
வேதனையின் வலியெல்லாம்
வரிகள் ஆவதும் புதிதல்ல!
sema de..........i lik this one a lot :)
ReplyDelete