Thursday, April 19, 2012

தேடல்

மனதின் உள்ளே
உறங்கும் ஏக்கம்
இரவின் தனிமையில்
தலையணை நனைக்க
ஒவ்வொரு துளியும்
உன்முகம் தாங்கி
மேலும் கொன்றால்
என்செய்வேன் நானும்..

தூரத்தில் தெரிகிறாய்
கானல் நீரென
உணர்ந்தது அறிவு
மறுக்கிறது மனம்
கிட்டா முடிவினைத்
தேடிச் செல்கிறேன்
இல்லாத பாதையில்
அனைத்தும் அறிந்தும்..

இரவும் விடியலும்
என்றும் போல்தான்
உன் நினைவோடுறங்கி
உன் நினைவோடு எழுகிறேன்;
எனினும் ஒரு மாற்றம் -
அன்றெல்லாம் மனது
பறவையென பறக்க
முகமதனில் என்றும்
மகிழ்வுடன் கூடிச்சிரிப்பு
இன்றோ என்னுள்ளே
இனம்புரியா கனமொன்று
என்றும் குடிகொண்டு
என் சிரிப்பைக் கொல்கிறது;
சுகமான நினைவெல்லாம்
சுமையாகி வதைக்கிறது ;
வதைதேன்னைக் கொன்றாலும்
மனம் தேடுவது உனையேதான்..

No comments:

Post a Comment