மெல்லிய காற்று மிதமாய் வீச
இயற்கையை இரசிக்கும் உந்தன் தோளில்
உன்னை இரசித்து நானும் சாய்ந்தேன்..
சட்டெனக் காற்று என் முகம் வருட
ஒரு கணம் இமைகளை மூடித் திறந்தேன்;
காற்றில் கலைந்த என் காதோர முடியை
உன் விரல் ஒதுக்க தேகம் சிலிர்த்தேன்...
உன் கைவிரலில் நெட்டி எடுத்து
இருளும் வரையிலும் கதைகள் பேசி
கண்ணும் கண்ணும் பிரியாவிடை பெற
கனவாய் கழிந்தது நேற்றய இரவும்...
No comments:
Post a Comment