Sunday, January 6, 2013

கனவாய் கழிந்தது..

மாலை நேர மரத்தடி நிழலில் 
மெல்லிய காற்று மிதமாய் வீச 
இயற்கையை இரசிக்கும் உந்தன் தோளில்  
உன்னை இரசித்து நானும் சாய்ந்தேன்..
சட்டெனக் காற்று என் முகம் வருட 
ஒரு கணம் இமைகளை மூடித் திறந்தேன்;
காற்றில் கலைந்த என் காதோர முடியை 
உன் விரல் ஒதுக்க தேகம் சிலிர்த்தேன்...
உன் கைவிரலில் நெட்டி எடுத்து 
இருளும் வரையிலும் கதைகள் பேசி 
கண்ணும் கண்ணும் பிரியாவிடை பெற 
கனவாய்  கழிந்தது நேற்றய இரவும்...

No comments:

Post a Comment