Sunday, January 13, 2013

மழை

சுட்டெரிக்கும் வெயில்
சட்டென குறைய
வெளிர் நீல வானம்
மெல்லக் கருத்திட
சுகமான குளிர்காற்றில்
வீசியது மண்வாசனை..
கையின் மேலதிலே
ஒரு துளி விழுந்திட
அனிச்சையாய் கண்கள்
அண்ணாந்து பார்த்தன..
மேலும் ஒரு துளி
கண்ணில் விழுந்திட
சட்டென இமைமூடி
உடல் முழுதும் சிலிர்த்திட்டேன்..
மனதின் ஆழத்தில்
உண்டான இன்பமெல்லாம்
மழையாய்ப்  பெய்திட
நனைந்தேன் நான் தனிமையாய்!

No comments:

Post a Comment