வேதனையின் பின்னணியில்...
இரவின் நிசப்தத்தில்
என்னுள் தனிமை;
தனிமையின் இனிமையிலும்
என்னுள் விசும்பல்;
இனம்புரியா வேதனையால்
கண்ணீரற்ற அழுகை;
என்னுள்ளே வலியதனை
எங்கோ உணர்கிறேன்;
சிந்தனையைத் திசைமாற்ற
ஏதேதோ செய்கிறேன்..
செய்யும் செயலனைத்தும்
வேதனையின் பின்னணியில்...
No comments:
Post a Comment