Monday, January 7, 2013

ஆத்திரம்

அன்றொரு நாள் ஆத்திரத்தில்
தோண்டிவிட்டேன் நினைவுகளை;
பேய் பிடித்து ஆடின
ஆள் மனதை சிதைத்தன
நாவில் விஷம் ஊட்டின
ஆடி பின் அடங்கின...
நிஜங்களோ இன்று தொலை தூரம்
நினைவெல்லாம் நிசப்தம்...

No comments:

Post a Comment